உடுமலை : ஆம்னிவேன் - சரக்குவேன் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த முன்னாள் விமானப்படை ஊழியர் சம்பத்குமார், உடல்நிலை சரியில்லாத தனது மனைவி பேபி கமலத்தை சிகிச்சைக்காக ஆம்னிவேனில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

Update: 2019-07-10 05:29 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த முன்னாள் விமானப்படை ஊழியர் சம்பத்குமார், உடல்நிலை சரியில்லாத தனது மனைவி பேபி கமலத்தை சிகிச்சைக்காக ஆம்னிவேனில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். வேன் பொள்ளாச்சி உடுமலை சாலையில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்குவேன் ஆம்னிவேன் மீது மோதிய விபத்துக்குள்ளானது. இதில் சம்பத்குமார் அவரது மனைவி மற்றும் ஆம்னிவேன் ஓட்டுனர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சரக்குவேன் ஓட்டுனர் மற்றும் பேபிகமலத்தின் தங்கை ஆகிய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்