தூத்துக்குடியில் மாற்றுதிறனாளிகள் சேர்ந்து நடத்தும் உணவகம் - மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு

தூத்துக்குடியில் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் மாற்றுதிறனாளிகள் சேர்ந்து நடத்தும் உணவகத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்.

Update: 2019-07-08 22:18 GMT
தூத்துக்குடியில் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் மாற்றுதிறனாளிகள் சேர்ந்து நடத்தும் உணவகத்தை, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்.  சுமார் 23 லட்சம் ரூபாய் மதிப்பில், 15 மாற்றுத் திறனாளிகள் சேர்ந்து இந்த உணவகத்தை நடத்துகின்றனர். தொடர்ந்து, மகளிர் திட்டம் சார்பாக, அம்மா இருசக்கர வாகன திட்டத்தில், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு மானியம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்