மாநிலங்களவை தேர்தல் : அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்...

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Update: 2019-07-08 08:28 GMT
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் போட்டியிடுவார்கள் என, அறிவிக்கப்பட்டது. இதேபோல், கூட்டணியில் பா.ம.க.-வுக்கு வழங்கப்பட்ட ஒரு இடத்தில், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர்  சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பாமக நிறுவனர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், பொதுமக்களுக்கு நன்றி - அன்புமணி ராமதாஸ்


இதேபோல்,  பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது பா.ம.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அதிமுக, பா.ம.க வேட்புமனு தாக்கல் - பத்திரிகையாளர் ஷ்யாம் கருத்து


அதிமுக, பாமக வேட்பு மனு தாக்கல் - மூத்த பத்திரிகையாளர் மாலன் கருத்து


Tags:    

மேலும் செய்திகள்