அத்திவரதர் 7ஆம் நாள் உற்சவம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழிசை தரிசனம்

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர், காஞ்சிபுரம் அத்தி வரதர் கோயிலில் தரிசனம் செய்தனர்.

Update: 2019-07-07 11:45 GMT
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர், காஞ்சிபுரம் அத்தி வரதர் கோயிலில் தரிசனம் செய்தனர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் உற்சவத்தின், 7ஆம் நாளான இன்று, பெருமாளுக்கு மஞ்சள் பட்டு உடுத்தி, தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விடுமுறை தினம் என்பதால், ஏராளமானோர் குவிந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, கோயிலுக்கு வந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சால்வை அணிவித்து வரவேற்கப்பட்டார். பெருமாளை வணங்கி அவர் ஆசிபெற்றார்.
Tags:    

மேலும் செய்திகள்