வழக்கு நிலுவையில் உள்ள லாரியில் திடீர் தீ விபத்து - போலீசார் விசாரணை

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீ பிடித்து எரிந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-04 21:31 GMT
சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீ பிடித்து எரிந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த லாரி மீது பீர்க்கங்கரணை காவல்நிலையத்தில், வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை, வழக்கு நிலுவையில் உள்ளதால், லாரி வேண்டுமென்றே தீவைத்து கொளுத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்