இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் சிங்களர்கள் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை - பழ.நெடுமாறன்

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் சிங்களர்கள் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-04 21:01 GMT
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் சிங்களர்கள் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராஜபக்சே ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் இன்று வரை நீடிப்பதாகவும், இதை இந்திய அரசு கேட்கவில்லை என்றும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றும், ராணுவத்திடம் தான் எல்லா அதிகாரமும் இருப்பதாக வெளிப்படையாக கூறியிருப்பது குறித்தும் இந்திய அரசு கேட்கவில்லை என குற்றம் சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்