எந்த மருத்துவமனையிலும் தண்ணீர் பிரச்சினை இல்லை - விஜயபாஸ்கர்

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது என விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2019-06-30 12:29 GMT
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு  திட்டமிட்டபடி   நடைபெற்று வருகிறது என, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த மருத்துவமனையிலும் இதுவரை தண்ணீர் பிரச்சினை ஏற்படவில்லை என்று தெரிவித்தார். மேலும், தண்ணீர் தட்டுப்பாட்டால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்  கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்