சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

போக்குவரத்து நெரிசல்-வாகன ஓட்டிகள் அவதி

Update: 2019-06-28 02:09 GMT
சென்னையில் எழும்பூர், மெரினா கடற்கரை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது.  சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்கு ஆளாகினர். கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி  அடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்