மேலும் ஒரு கடல்நீரை குடிநீராக்கும் ஆலை : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

நெம்மேலியில், ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில், கடல்நீரை குடிநீராக்கும் புதிய நிலையத்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

Update: 2019-06-27 07:15 GMT
நெம்மேலியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள்  ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

முதலில் அடிக்கல் நாட்டுவதற்கு அடையாளமாக கல்வெட்டை, முதலமைச்சர் திறந்து வைத்தார். இதனை அடுத்து பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.




Tags:    

மேலும் செய்திகள்