பாலாற்றில் மணல் கடத்த முயற்சி : இருவர் கைது

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பாலாற்றில், மணல் கடத்த முயன்றதாக கூறி, இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2019-06-26 11:22 GMT
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பாலாற்றில், மணல் கடத்த முயன்றதாக கூறி, இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் தீவிர ரோந்து பணி வந்த போது, மணல் கடத்தல்காரர்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பி ஓடிய ஐந்து பேரை குடியாத்தம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடத்தல்காரர்களிடம் இருந்து ஒரு லாரி, ஆறு மாட்டு வண்டிகள் மற்றும் ஒரு மினி ஆட்டோ ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்