இரிடியம் மோசடி - 3 பேர் கும்பல் கைது
சேலத்தில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு தொழிலதிபர்களிடம் 50 லட்ச ரூபாய் பறித்த மூன்று பேர் கைது.
சேலத்தில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு தொழிலதிபர்களிடம் 50 லட்ச ரூபாய் பறித்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் ஸ்டாலின். சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அவர் அளித்துள்ள புகாரில் சென்னையை சேர்ந்த 3 பேர் கும்பல் இரிடியம் இருப்பதாக கூறி தன்னிடமும், தனது நண்பரிடம் 50 லட்ச ரூபாய் வரை பணம் பறித்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட தனிப்படையினர், சரவணன்,சிவகுமார் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.