துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்த பயணி - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில், பயணி ஒருவரிடமிருந்து துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-06-23 00:46 GMT
கொல்கத்தா செல்வதற்காக விமானம் ஒன்று தயாராக இருந்த நிலையில், அதில் ஏறுவதற்காக வந்த பயணிகளின் உடமைகளை, மத்திய தொழிற்படை போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது, பிரோஸ் ஷேக் என்பவரின் சூட்கேஸில், 12 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதி, அவரிடம் இருந்த நிலையில், தோட்டாக்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்