காணாமல் போன பள்ளி மாணவர் ஒராண்டுக்கு பின் ஓசூரில் மீட்பு...

மகாராஷ்டிரா மாநிலத்தில் காணாமல் போன பள்ளி மாணவர் ஒருவர் ஒராண்டுக்கு பின்னர் ஓசூரில் மீட்கப்பட்டுள்ளார்.

Update: 2019-06-21 21:41 GMT
மகாராஷ்டிரா மாநிலம் யுத்மால் மாவட்டம் பிம்பிரி இசாரா கிராமத்தை சேர்ந்தவர் தாகே நாகூசாது.கடந்த ஒராண்டுக்கு முன்பு நாகூசாது தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற போது இவரது மகன் சுபம் காணாமல் போயுள்ளார். ஒரு ஆண்டு காலமாக சுபமை மகாராஷ்டிரா போலீசார் தேடி வந்த நிலையில், அவர் ஓசூர் ரயில் நிலையத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலறிந்து வந்த பெற்றோர், மகனை ஒரு ஆண்டுக்கு பின் பார்த்த உற்சாகத்தில் அவரை கட்டி தழுவி கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்