தர்ம‌புரி : தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் - சிக்கிய பெண் அதிகாரிகள்

தர்ம‌புரி மாவட்டம் பொன்னாகரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில், லஞ்சம் பெற்ற 2 பெண் அதிகாரிகள் சிக்கினர்.

Update: 2019-06-20 04:23 GMT
தர்ம‌புரி மாவட்டம் பொன்னாகரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில், லஞ்சம் பெற்ற 2 பெண் அதிகாரிகள் சிக்கினர். தர்ம‌புரி மாவட்டம் பொன்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட கருப்பையன், தமது பட்டதாரி மகள் சாந்தமணிக்கு, திருமண நிதி உதவி பெற கடந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தார். இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகளிடம் பல முறை கேட்ட போது, அவர்கள் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இது குறித்து கருப்பையன் மகன் செல்வகுமார், தரும‌புரி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், ரசாயனம் தடவிய 4 ஆயிரம் ரூபாய் பணத்தை செல்வகுமாரிடம் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் கொடுத்தனர். அந்த பணத்தை சமூக நலத்துறையில் பணியாற்றும் சரோஜா மற்றும் சாந்தா ஆகியோர் வாங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக அவர்களை பிடித்து கைது செய்தனர்
Tags:    

மேலும் செய்திகள்