அருப்புக்கோட்டை : மண்வெட்டியால் தாக்கப்பட்ட கள்ளக்காதலன் உயிரிழப்பு

அருப்புக்கோட்டையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-19 02:45 GMT
எஸ்.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பணன். கட்டிட தொழிலாளியான இவரும் பாளையம்பட்டியை சார்ந்த காளிமுத்துவும் ஒன்றாக கட்டிட வேலை செய்து வந்துள்ளனர். காளிமுத்துவும், கருப்பபணனின் மனைவியும் நெருங்கி பழகுவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பணன் காளிமுத்துவை விருந்துக்கு வருமாறு வீட்டுக்கு அழைத்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு சென்ற காளிமுத்துவும், கருப்பணனும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் தனது மனைவியையும், காளிமுத்துவையும், மண்வெட்டியால் கருப்பணன் தாக்கியுள்ளார். மேலும் காளிமுத்துவின் தலையில் கல்லை போட்டு விட்டு அவர் தப்பிச்சென்றார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காளிமுத்து, நேற்று மாலை உயிரிழந்தார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த கருப்பணனை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்