குன்னூர் : நாவல் பழத்திற்கு ஆசைபட்ட கரடி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நாவல் பழ மரத்தில் இருந்து தவறிவிழுந்த கரடி ஒன்று உயிரிழந்தது.

Update: 2019-06-16 03:12 GMT
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நாவல் பழ மரத்தில் இருந்து தவறிவிழுந்த கரடி ஒன்று உயிரிழந்தது. செம்மநாரை காப்புக்காட்டை ஒட்டிய தேயிலை தோட்ட பகுதியில் கரடி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்துள்ளது. தேயிலை தோட்டத்தில் இருந்த உயரமான நாவல் பழ மரத்தில் கரடி ஏறியுள்ளது. நாவல் பழங்களை சுவைத்துகொண்டிருக்கையில் மரத்தின் கிளை முறிந்து விழுந்துள்ளது. அருகில் இருந்த பாறை மீது விழுந்து காயம் ஏற்பட்டதால் கரடி உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்