மக்கள் தாகத்தை தீர்க்கும் போக்குவரத்து காவலர்... பல்வேறு தரப்பினரும் பாராட்டு

கடலூர் போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றி வரும் தலைமை காவலர் மணிக்கண்ணன், பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பணியை செய்து வருவது பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Update: 2019-06-14 03:03 GMT
கடலூர் போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றி வரும் தலைமை காவலர் மணிக்கண்ணன், பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பணியை செய்து வருவது பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் எந்த பகுதிக்கு பணிக்கு சென்றாலும், தமது இரு சக்கர வாகனத்தில் தண்ணீர் கேனை கட்டிக் கொண்டு செல்கிறார். இந்த தண்ணீர் கேன் மூலம் தண்ணீர் தேவைப்படும் மக்களுக்கு தண்ணீரை இலவசமாக வழங்கி வருகிறார். காவலர் மணிக்கண்ணன், இது போல், தண்ணீர் வழங்குவது பொது மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. போக்குவரத்து காவலரின் இந்த செயலை, பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்