மின்தடைக்கு எதிர்ப்பு - மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

மானாமதுரையில் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-11 01:51 GMT
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனந்தபுரம் பைபாஸ் பகுதியில் அடிக்கடி மின் தடை  ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்