கோடை விடுமுறை இறுதிநாளில் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறையின் இறுதி நாளான நேற்று, சுற்றுலா பயணிகளின் வருகையால் மாமல்லபுரம் களைகட்டியது.
கோடை விடுமுறையின் இறுதி நாளான நேற்று, சுற்றுலா பயணிகளின் வருகையால் மாமல்லபுரம் களைகட்டியது. இங்குள்ள கடற்கரை கோயில், அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டை கல், ஐந்து ரதம் ஆகிய புராதன பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மாமல்லபுரம் கடலிலும், ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.