"பொது மாறுதல் கலந்தாய்வை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும்" - ஆசிரியர் சங்கத் தலைவர்கள் வலியுறுத்தல்

பள்ளிகள் துவங்குவதற்கு முன்பாக ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2019-05-28 09:04 GMT
பள்ளிகள் துவங்குவதற்கு முன்பாக ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகள் துவங்கி சில மாதங்களுக்குப் பிறகு கலந்தாய்வு நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் மாறிச் செல்லும் சூழல் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை பள்ளி துவங்குவதற்கு முன்பாக நடத்தி முடிக்க வேண்டும் என ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்