நதிகள் இணைப்பு - மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு

நதிகள் இணைப்பு குறித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்து வரவேற்கத்தக்கது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-28 04:55 GMT
நதிகள் இணைப்பு குறித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்து வரவேற்கத்தக்கது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் குடிநீர் தட்டுபாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். தமிழகத்தில் அதிமுக அரசும், மத்தியில் பாஜக அரசும் தொடர வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்றும் கூறினார். 13 மாநிலங்களவை, ஒரு மக்களவை உறுப்பினரை கொண்ட அதிமுகவிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவதாகவும் பாண்டியராஜன் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்