பாலைவனமாக காட்சி தரும் பூண்டி ஏரி

வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதாலும், நீர்வரத்து குறைந்ததாலும் பூண்டி ஏரி பாலைவனமாக காட்சியளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2019-05-27 08:40 GMT
வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதாலும், நீர்வரத்து குறைந்ததாலும் பூண்டி ஏரி பாலைவனமாக காட்சியளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதாலும், கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து நின்று விட்டதாலும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து உள்ளது. மேலும் வரலாறு காணாத அளவிற்கு பூண்டி ஏரி பாலைவனமாக காட்சியளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்