"தமிழகத்துக்கு எந்த திட்டங்களும் கிடைக்கப்போவதில்லை" - பிரேமலதா

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் கிடைக்கவில்லை, இம்முறையும் கிடைக்கப்போவதில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

Update: 2019-05-25 21:35 GMT
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் கிடைக்கவில்லை, இம்முறையும் கிடைக்கப்போவதில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார். சென்னை திருவொற்றியூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும், தமிழகத்தில் அவ்வாறு இல்லாதது ஏனென்று தெரியவில்லை என்றார். தேர்தலில் கடந்த இரண்டு முறை தோல்வியுற்று வாக்கு சதவீதம் குறைந்ததால், சின்னம் முடக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, தற்பொழுது அதற்கான வாய்ப்பு இல்லை என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்