மதுராந்தகத்தில் அரசாங்க இடத்தை ஆக்கிரமித்த அ.தி.மு.க. பிரமுகர்? - தாசில்தார் போலீசார் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்ததாக அ.தி.மு.க. பிரமுகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

Update: 2019-05-17 21:12 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்ததாக அ.தி.மு.க. பிரமுகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இயற்கை சுற்றுச் சூழல் அமைப்பு நடத்தும் அ.தி.மு.க. பிரமுகர் முனுசாமி, அரசு குடியிருப்பில் உள்ள இடத்தை ஜே.சி.பி. இயந்திரத்தை வைத்து சுத்தம் செய்து மற்றவர்களுக்கு விற்பதாக புகார் எழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தாசில்தார், முனுசாமியை காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். ஜே.சி.பி. இயந்திரத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்