நினைத்திருந்தால் நான் முதலமைச்சராகி இருப்பேன் - அம‌முக பொதுச்செயலாளர் தினகரன்

சூலூர் தொகுதியில் போட்டியிட உள்ள அ.ம‌.மு.க. வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து, கோவை சின்னியம்பாளையம் பகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் பிரச்சாரம் செய்தார்.

Update: 2019-05-13 02:06 GMT
சூலூர் தொகுதியில் போட்டியிட உள்ள அ.ம‌.மு.க. வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து, கோவை சின்னியம்பாளையம் பகுதியில்  அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ச‌சிகலா, தனது சகோதராக நினைத்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கினார் என்றார். நினைத்திருந்தால், தானே முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்க முடியும் என்றும் தினகரன் தெரிவித்தார். வரும் 23 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையோடு, முதலமைச்சர் பழனிச்சாமியின் ராஜ தந்திரம் முடியப்போகிறது என்றும் தினகரன் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்