ஆக்கூர் : "ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டனர்" - கோட்டாட்சியரிடம் மனு

நாகை மாவட்டம் ஆக்கூர் கிராமத்தை சேர்ந்த அசோக் என்பவரின் நிலத்தை அதே பகுதியில் இயங்கி வரும் கிருஸ்துவ நிறுவனம் ஒன்று கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

Update: 2019-05-12 11:21 GMT
நாகை மாவட்டம் ஆக்கூர் கிராமத்தை சேர்ந்த அசோக் என்பவரின் நிலத்தை அதே பகுதியில் இயங்கி வரும் கிருஸ்துவ நிறுவனம் ஒன்று கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சந்திரமோகன் என்பவர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், அசோக் குடியிருக்கும் இடத்தில் உள்ள மரங்களை வெட்டியதுடன் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதற்கிடையே, அசோக்கின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், நிலம் தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றால் மட்டுமே இறுதி சடங்கில் கலந்து கொள்வதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தனி ஆளாக, தாயாரின் இறுதி சடங்கை முடித்த அசோக், நில தகராறு காரணமாக தனது குடும்பத்தை  ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்