குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

தருமபுரி அருகே குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகளை தாக்கி,சிறுமியை உறவினர்கள் மீட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-05-11 04:34 GMT
பென்னாகரம் அருகே உள்ள பவளந்தூர் கிராமத்தை சேர்​ந்த பதினோராம் வகுப்பு மாணவி ஒருவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற ஊரக நல அலுவலர் உள்ளிட்டோர், பதினோராம் வகுப்பு சிறுமியை மீட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் சென்றனர். அப்போது, மெதுவாக பயணித்த பேருந்தில் ஏறிய, சிறுமியின் உறவினர்கள், சைல்டு லைன் அமைப்பினரை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர், சிறுமியை அங்கிருந்து உடனடியாக அழைத்துச் சென்றனர்.அதிகாரிகளை தாக்கி சிறுமியை அழைத்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்