வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update: 2019-05-06 10:21 GMT
அதேநேரத்தில் உள் தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு அனல் காற்று வீசும் எனவும் அறிவித்துள்ளது. குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்,நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்