கோயில் திருவிழாவில் பெண்கள் கம்ப ஆட்டம்...

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.

Update: 2019-05-05 23:39 GMT
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. கோயிலின் முன்பு நடப்பட்ட கம்பத்தை சுற்றிலும் தினமும் இரவில் கம்ப ஆட்டம் ஆடுதல் நிகழ்ச்சி நடைபெறும். இதில், இளைஞர்கள், பெரியவர்கள், சிறுவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு ஆடி மகிழ்ந்தனர். புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரும் கம்ப ஆட்டம் ஆடுதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மேள தாளத்திற்கு ஏற்றபடி படி நடனம் ஆடி அசத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்