மதுரையில் பிரபல ரவுடி குத்திக் கொலை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பிரபல ரவுடி பிளேடு பாண்டி, மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளான்.

Update: 2019-05-04 02:48 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பிரபல ரவுடி பிளேடு பாண்டி, மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளான். உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டி சடலமாக கிடந்ததை கண்ட மக்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 8 பேர் சேர்ந்து மது அருந்திய போது, ஏற்பட்ட தகராறில் பாண்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து கைரேகை நிபுணர்களும் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்