மீனாட்சி கோயிலில் பாதுகாப்பு வசதி - டி.எஸ்.பி தலைமையிலான குழு ஆய்வு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாதுகாப்பு வசதி குறித்து டி.எஸ்.பி வசந்தன் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது.

Update: 2019-04-29 10:22 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாதுகாப்பு வசதி குறித்து டி.எஸ்.பி வசந்தன் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது.  கோவிலுக்கு வெளியே, சித்திரை வீதிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பாதைகளில், கண்காணிப்பு, பலப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து அந்த குழு சோதனை செய்தது. இலங்கை தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மதுரை மீனாட்சி கோவிலுக்கு, ஏற்கனவே, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளது. இதன் காரணமாக, 24 மணி நேரமும், சுழற்சி முறையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்