குழந்தை விற்பனை - கைதானவர்களிடம் தீவிர விசாரணை

குழந்தைகள் விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

Update: 2019-04-28 11:57 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக  அமுதவல்லி அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முருகேசன், இடைத்தரகர் பர்வீன். நிஷா, அருள்சாமி ஆகிய 6 பேர் ஏற்கனவே  கைது செய்யப்பட்டனர். மேலும் லீலா, செல்வி, 
இடைத்தரகர் பாலாமணி  ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.செல்வியும், இடைத்தரகர்  பாலாமணியும் தனியார் மருத்துவமனைகளில் கருமுட்டை விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கருமுட்டை செலுத்தி குழந்தைகள் பெற முடியாத தம்பதிகளிடம் அதிக விலைக்கு குழந்தைகளை விற்பனை செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தற்காலிக துப்பரவு பணியாளராக இருந்த  பாண்டியன் கோவையை சேர்ந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தையை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததும் விசாரணையில்  தெரிய வந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்