உபெர், ஓலா நிறுவனங்களை முறைப்படுத்தக் கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

உபெர், ஓலா போன்ற நிறுவனங்களை முறைப்படுத்த கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Update: 2019-04-26 23:42 GMT
சி.ஐ.டி.யூ.வை சேர்ந்த ராஜ்குமார் தொடர்ந்த வழக்கில் ஓலா, உபெர் நிறுவனங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை ​விட குறைவாக வசூலிப்பதாகவும், இதனால் ஆட்டோ தொழில் பாதிக்கப்படுவதாக மனுவில் தெரிவித்திருந்தார். வழக்கு விசாரணையின் போது மனுதாரர் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் குறைந்த கட்டணத்தில் வாகனங்களை இயக்கும் நிறுவனங்களை முறைப்படுத்த  விதிகளை உருவாக்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்