புதுப்பொலிவுடன் தயாராகும் யானை ஆம்புலன்ஸ்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஹைட்ராலிக் யானை ஆம்புலன்ஸ் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

Update: 2019-04-23 07:10 GMT
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஹைட்ராலிக் யானை ஆம்புலன்ஸ் புதுப்பொலிவு பெற்றுள்ளது. புதிய வர்ணம் பூசப்பட்டதால், ஆம்புலன்ஸ் வாகனம் மிகவும் அழகாக காட்சி அளிக்கிறது. மேலும் மேல்தளத்தில் வலை, 5 அடி உயரத்தில் நிறுத்தும் வசதி, பக்கவாட்டுக் கதவுகள் உள்ளதால், அடர்ந்த காட்டில் இதை நிறுத்தி, அங்கு தங்கி விலங்குகளை கண்காணிக்க முடியும் எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கியது முதல் தற்போது வரை ஒருமுறை கூட யானைகள் வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்