"அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை" - தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடப்பட்டது.

Update: 2019-04-12 03:53 GMT
அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடப்பட்டது. சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், அதிக கட்டணம் வசூலிப்பதாக, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பனை சந்தித்து, பெற்றோர் முறையிட்டனர். அப்போது, விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்ணப்பன் எச்சரித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்