தமிழக ஆளுநர் மீது இந்திய கம்யூனிஸ்ட் புகார்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் தெரிவித்துள்ளது.

Update: 2019-04-03 17:57 GMT
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அதிமுக மற்றும் பாஜகவின் சாதனைகளை அவர் குறிப்பிடுவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் பிரசார கூட்டங்களில் தேர்தல் முடிந்தவுடன் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் பேசுவது நடத்தை விதிகளுக்கு எதிரானது எனவும் கூறப்பட்டுள்ளது.வருமான வரித்துறையை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை மிரட்டும் ஆளும் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்