மின்சார துறையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறும் ஈஸ்வரன் ஆதாரம் இருந்தால் வெளியிடலாம் - தங்கமணி

மின்சார துறையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறும் ஈஸ்வரன், அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடலாம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-01 01:52 GMT
மின்சார துறையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் தலைவர் ஈஸ்வரன், அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடலாம் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு என்பதே இல்லை என்றார். மின்சாரத் துறையில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படுவதை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்