மருத்துவமனையில் நள்ளிரவில் நோயாளிக்கு அரிவாள் வெட்டு

வாணியம்பாடி அருகே முன்விரோதம் காரணமாக, அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் புகுந்து, நோயாளியை அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-03-26 03:04 GMT
வேலூர் மாவட்டம் வெள்ளைக்குட்டை பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் தீர்த்திகிரி அரசு தரப்பு வீடுகளில் கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முருகன் உடல் நிலை சரியில்லை எனக்கூறி பணிக்கு செல்லாமல், கட்சி வேலைகளை பார்த்துள்ளார். இதை பார்த்த தீர்த்தகிரி, முருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் தீர்த்தகிரியின் மகன் மோகன், தந்தையை தாக்கிய முருகனை பழிவாங்க நினைத்து, நள்ளிரவில் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து முருகனின் கை, கால்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார். நோயாளியின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், முருகனுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்