100 % வாக்குப்பதிவுக்காக விழிப்புணர்வு - மணல் சிற்பம் வடிவமைத்த மாணவர்கள்
தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலில் 100 சதிவிகித வாக்குப்பதிவுக்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலில் 100 சதிவிகித வாக்குப்பதிவுக்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக,மாமல்லபுரம் கடற்கரையில் மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 50 பேர் வாக்களித்து விரலை காண்பிப்பது போல் மணல் சிற்பம் வடிவமைத்தனர். சுற்றுலா வந்த பயணிகள் பலர் இந்த மணல் சிற்பத்தை பார்த்து,ரசித்துவிட்டு சென்றனர்.