காரில் கொண்டுவரப்பட்ட ரூ 3.94 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
தாராபுரத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 3 லட்சத்து 94 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
தாராபுரத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 3 லட்சத்து 94 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர். தாராபுரத்தில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, திருப்பூரில் இருந்து தேனி நோக்கி சென்ற காரில் இந்த பணம் சிக்கியுள்ளது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், காரில் இருந்த சில்வா, சுதன்பிரிய தர்ஷன், ரவீந்திரன், விமல் ஆகிய நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.