பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை - இரு வேறு இடங்களில் ரூ.3.45 லட்சம் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் மூணு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-20 11:38 GMT
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், நடத்திய வாகன சோதனையில், மூணு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை, பறிமுதல் செய்தனர்.யுவராஜ் என்பவர், திருமணத்திற்கு புதிய ஆடை வாங்குவதற்காக,கொண்டு வந்த, ஒரு லட்சத்து, எட்டாயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.இதே போல், ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீஸ்வரன்  நடத்திய சோதனையில், வியாபாரியிடம், 2 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.இருவரிடமும், உரிய ஆவணங்களை காட்டி, பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்