பொள்ளாச்சி பாலியல் சம்பவம் எதிரொலி - வஉசி மைதானத்தில் போலீஸ் கண்காணிப்பு

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில், தீவிர விசாரணை நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர்

Update: 2019-03-16 08:20 GMT
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில், தீவிர விசாரணை நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றனர்.இந்த நிலையில் கோவை வஉசி மைதானத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்கள் கூடியதுபோல, பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் நடக்கலாம் என்பதால் வஉசி மைதானத்தை போலீஸ் கண்காணித்து வருகிறது என்று கூறினர். மைதானத்துக்குள் பொதுமக்கள் செல்வதை தடுக்கு வகையில் கயிறுகள் கட்டப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்