பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள் : அரசு உதவி செய்யுமா?

மானாமதுரை அருகே தாய், தந்தையை இழந்து தவிக்கும் 3 குழந்தைகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-03-09 09:31 GMT
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டையில் வசித்து வந்தவர் பாலமுருகன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் இவரது மனைவி கோமதி கூலி வேலை செய்து தன் 3 பிள்ளைகளை வளர்த்து வந்தார். கபிலரசன், கலையரசன், காவ்யா என 3 சிறுவர்களும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கோமதி உயிரிழந்த நிலையில் 3 குழந்தைகளும் தனித்து விடப்பட்டனர். இவர்களை வயதான பாட்டி மட்டும் பராமரித்து வரும் நிலையில் போதிய வருமானமின்றி வீட்டு வேலைகளை தாங்களே செய்து வருகின்றனர். உறவினர்கள் யாரும் உதவ முன்வராத நிலையில் இவர்கள் 3 பேருக்கும் அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்