பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : கணக்கில் வராத ரூ. 1 லட்சம் பணம் பறிமுதல்

சேலம், பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ஒரு லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விடிய விடிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

Update: 2019-03-09 07:05 GMT
சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் கேட்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,  கணக்கில் வராத ஒரு  லட்சம் ரூபாய் பணம் அங்கு இருந்ததை கண்டுபிடித்தனர். அதை கைப்பற்றிய அதிகாரிகள்,  சார் பதிவாளர் விஜயகுமாரி உள்ளிட்ட ஆறு அலுவலர்களிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்