ஓவியம், சிற்பக்கலையில் சிறந்தவர்களுக்கு விருதுகள் கலைச்செம்மல் விருதுகளை அறிவித்தது தமிழக அரசு

ஓவியம் மற்றும் சிற்பக்கலையில் சிறந்தவர்களுக்கு தமிழக அரசு கலைச்செம்மல் விருதுகளை அறிவித்துள்ளது.

Update: 2019-03-08 11:59 GMT
கடந்த 2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரை இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நந்தன், கணபதி ஸ்தபதி, கோபிநாத், ராமஜெயம், அனந்தநாராயணன் நாகராஜன், தமிழரசி, டக்ளஸ், கீர்த்திவர்மன், ஜெயக்குமார், கோபாலன் ஸ்தபதி ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு தேர்வானவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் பட்டயமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்