செங்குன்றம் : போலீஸ் போல நடித்து மாமூல் கேட்டு மிரட்டிய நபர்
செங்குன்றம் பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து சென்றிருந்தனர்.
செங்குன்றம் பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து சென்றிருந்தனர். அப்போது அங்குள்ள நடைபாதை வியாபாரிகளிடம் போலீஸ் என கூறி மாமூல் கேட்டு ஒருவர் மிரட்டியதை கண்டனர். இதையடுத்து அந்த நபரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சபாபதி என்பதும், போலியாக போலீஸ் போல நடித்து, பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.