திருப்பூர் : தரமான டீ தூளை வாங்கி கலப்படம் செய்து விற்பனை - 100 கிலோ டீ தூள் பறிமுதல்
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே, தரமான டீ தூளை வாங்கி அதில் கலப்படம் செய்து விற்பனை செய்துவந்த நபர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே, தரமான டீ தூளை வாங்கி அதில் கலப்படம் செய்து விற்பனை செய்துவந்த நபர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். காரில் கிலோ கணக்கில் டீ தூளை ஆனந்த் ராஜ் என்பவர் எடுத்து வந்தார். மொத்தமாக டீ தூளை விலைக்கு வாங்கி கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாக வாகன சோதனையின்போது அவர் தெரிவித்துள்ளார். சந்தேகம் ஏற்பட்டதால், போலீசார், அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, 100 கிலோ அளவிற்கு டீ தூள் இருப்பதை கண்டு கைப்பற்றினர்.