கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
கச்சச்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கச்சச்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கச்சீத்திவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டியதாக கூறி 5 பேரை இலங்கை கடற்படை நேற்றிரவு கைது செய்தது. இந்நிலையில், இன்று காலை மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, மீனவர்கள் 13 பேரையும் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.