அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த திட்டங்கள் - அமைச்சர் கே.பி. அன்பழகன்

அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

Update: 2019-02-21 00:27 GMT
அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். தருமபுரியில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நடப்பாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு அரசு ஒதுக்கிய 28 ஆயிரத்து 757 கோடியே 62 லட்சம் ரூபாயில் அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு 14 விலையில்லா பொருட்கள் வழங்கி இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார். முன்னதாக 2 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருமண நிதி உதவி மற்றும் 5.78 கிலோ  தாலிக்கு தங்கத்தை 734 பயனாளிகளுக்கு வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்