தமிழ் மொழிக்காக பாடுபட்ட 56 அறிஞர்களுக்கு விருதுகள் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

தமிழுக்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட அறிஞர்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.

Update: 2019-02-19 19:01 GMT
இத்திட்டத்தின்படி நடப்பாண்டில் தேர்வு செய்யப்பட்ட 56 அறிஞர்களுக்கு  விருதுகள் வழங்கும் விழா, தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஐம்பத்தாறு அறிஞர்களுக்கு, விருதுகளையும், கேடயங்கள் மற்றும் பரிசுத் தொகைக்கான காசோலைகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தமிழ்த்தாய் விருது பெற்ற புலவர் புவனேஸ்வருக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார். மற்ற விருதாளர்களுக்கு  ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்